பூவை எஸ். ஆறுமுகம் G 3
மண்டியிலே முத்துராமன் செட்டியாரும் கணக்குப் பின்ளையும் மட்டும் சாப்பாட்டுக்குச் செல்லவில்லை. அவர்கள் எதிர்பார்த்திருந்த வேலாயுதம் அதோ அத்து விட் டான்.
‘ உட் காரப்பா, வேலாயுதம்!” என்றார் செட் டியார்.
கல்லா வேலாயுதம் நின்று கொண்டேயிருந்தான். மடிப் பணத்தை எடுத்து அப்படியே செட்டி பாரிடம் பக்தியும் மரியாதையும் துலங்கச் சமர்ப்பித் தான்.
புன்னகையுடன் பணத்தைக் கை நீட்டிப் பெற்றார் செட்டியார்.
திமிஷங்கள் புள்ளிமான்களாயின.
“ஒரு லட்சத்து இருபதாயிரம் கரெக்டா இருக்கு தப்பா, வேலாயுதம்!” என்று வேலாயுதத்தை நோக்கிச் சொன்னார் செட்டியார். பிறகு, கணக்குப் பிள்ளையை நோக்கி, சேட்ஜியை வரச் சொல்லு மாறு தெரிவித்தார்.
சேட் வந்தார். கடன் அடைந்தது.
மிச்சம் இருந்த ஐயாயிரம் செட்டியாரின் உள்வாங் கையில் அடங்க முடியாத விதிபோலக் காட்சி கோடுத்தது.
‘வேலாயுதம்!”
‘எஜமான்!”
“இனி நீ நீங்கதான் இந்த மண்டிக்குச் சொந்தக் காரர்’ என்றார் செட்டியார், வழக்கமான
புன் ன கையோ டு.
கல்லா வேலாயுதம் கண்களில் நீர் மிளிர அந்தக் கல்லா வை நோக்கி வணங்கினான்.
நி - 13