ஆவை எஸ். ஆறுமுகம் 2
மறு பிறப்பெடுத்து உங்க வயிற்றிலே திரும்பியும் வந்து பிறந்திடுவானுங்க, பெரியம்மா! ... அப்போ, அவனுக்கு அவனோட இந்தச் சொக் கா ைபப் போட்டு அழகு பார்க்கவேனுமில்லே!...ஆத்தா மூத்தவ கண் திறப்பா! நீங்க உங்க கண்ணைத் து ைடச்சுக்கிடுங்க பெரிதும் மா!’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய சிறுமி தெய்வானை விம்ம ஒான ஸ்.
ராஜாவின் ரோஸ் கலர் ஸ்லாக் திரும்பிவிட்டது! இதே போன்று, ராஜாவும் திரும்பி வந்து விடு வான் அல்லவா?-அவளுடைய பெற்ற மனம் நம் பிக்கை எனும் உயிர்க் கழுவில் தவித்துத் துடித்துத் தத் தளித்த வண்ணம் ஆனந்தக்கூத்து ஆடிக் கொண் டிருந்தது. ஆத்தா மூத்தவளே!... முத்து முத்தாகக் கண்ணிர் உருகிக் கரைந்து வழிந்து கொண்டே இருக்கிறது.
நல்வா க்குக் கொடுத்த வள் சிறுமி தெய்வ யானையா?- அல்லது..? -
மீனா அந்த ரோஸ் கலர் ஸ்லாக்கை ஆர்வத்துடிப் புடன் எடுத் தாள்; நடுங்கும் கரங்களால் அதைத் தன்னுடைய மார்பகத்தில் அனைத்துக் கொண் 1.ாள். மூடிய கண்கள் மூடியவாறே இருந்தன,
அதோ, ராஜா!... “ராஜா’ உயிரைக் குரலாக்கிக் கூவினாள். நெஞ்சைத் தடவிக் கொண்டாள்.
ராஜா வுக்கு எவ்வளவு அழகாக, பாசமாக, பரி வாகப் புன்னகை செய்யத் தெரிந்திருக்கிறது:
மார்பில் இழைந்த அந்தச் சட்டையை எடுத்து கொண்டு கண்களை ஆசையோடு திறந்தாள்.