பக்கம்:நிதர்சனங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ் ஆறுமுகம் 15

உறங்கிக் கிடந்த அந்தக் கடிதத்தை-கையொப்பம் செய்யப்படாமல் இருந்த அக் கடிதத்தை நீர்ப்படலத் தின் ஊடாக, ஊடும் பாசமாகப் பார்வையிட்டாள். “ஓ...மை.மை...!. தொடர்ந்த சொற்களுக்குத் தொடர் சேர்க்க மனம் இழந்த வளாக கருந்தேள் கொட்டி விட்ட பாங்கிலே, பாங்காக நடுங்கிக் கொண்டே அந்தக் கடிதத்தையும் அந்தப் புகைப் படத் தொகுப்பையும் நூதனமான வெறி முள அள்ளித் திணித்து விட்டு, ரகசிய இழுப்பறையை ரகசியமாகவே மூடிப் பூட்டி விட்டாள்.

அமிர்தாஞ்சனம் மணக்கும், மண்டைக் கனத்தை அழுத்த, ரேடியோ க்ராமை அழுத்தினாள் ரே கா.

‘விளக்கேற்றி வைக்கிறேன்: -

விடிய விடிய எரியட்டும்...!”

ரேகா ஷ்வர் பாத் எடுத்துக் கொண்டிருக் கிறாள். எஸ். எஸ்., பிறந்த மேனியாகவே தான், உஷார்!-தொடர்ந்த கதை இங்கே முடிந்து விடும்: பராக்...! - -

‘தம் மரே தம் புறப்பட்டது. “ஒமேகா பூஞ்சிட்டு ஒய்யாரம் சேர்த்து ஐந்து முறை கூவி, இரண்டொரு வினாடிகள் ஆகியிருந்தன:

“அ...ம்...மா! அம்மா!’ .

தட்டினால் திறக்கப்படும் என்பது பச்சைத்தன மான பொய்.

‘அம் மா!...அம்... மா...!”

“என்ன?’ என்று உள்ளேயிருந்து ஆணைக்குரலை. வெளியே ஏவிவிட்டாள். ஆனால், அது ஏவுகணை யாக இருக்க முடியாது! - ... ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/25&oldid=681036" இலிருந்து மீள்விக்கப்பட்டது