கலைஞரின் சட்டமன்ற உரைகள்
437
இதே அடிப்படையில் நகர்ப் பகுதிகளில் செயல் படுத்தும் திட்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அரசு 1,286 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துறைகளின் வாயிலாக வரும் நிதியாண்டில் பல திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறது.
மொத்தத்தில் இந்த வகையிலே அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடான 5,041 கோடி ரூபாயில் 75 விழுக்காடு கிராமப் பகுதி மக்களின் நலனுக்காக செலவிடப் படவிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இவை தவிர, அரசு சமூக நலன், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரம், கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலன், நுகர்பொருள் வழங்கல் போன்ற துறைகளில் செயல்படுத்தும் திட்டங்களின் பெரும்பாலான பலன்கள் ஊரகப் பகுதி மக்களுக்குத்தான் செல்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலை வாய்ப்பைக் குறித்து ஞானசேகரன் அவர்களும், சுப்பராயன் அவர்களும், திருநாவுக்கரசு அவர்களும் இங்கே குறிப்பிட்டார்கள். அதைப் பற்றி சில விவரங்களைச் சொல்வது என்னுடைய கடமையாகும்.
மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை (Evaluation and Applied Research Department) இயக்குநரின் ஆய்வின்படி கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4.22 இலட்சம் வேலைவாய்ப்பு வேளாண்மைத் துறையிலும், 6.78 இலட்சம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் சேவைத் துறைகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு நம் நாட்டைச் சேர்ந்த மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை அதிக அளவில் பெறுவதற்கும் ஏற்ற சூழ்நிலையை