உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

483

இராஜ்ய சபாவிற்கு வந்துவிட்டு, எதிர்த்து நடக்கிறீர்கள்; அதனாலே உங்களையெல்லாம் விலக்கப்போகிறோம் என்ற ஒரு செய்தி வந்தது. சோதனை வந்தவுடன் வேறு வழியில்லை; இவர்கள் எல்லாம் விலகியாக வேண்டும்; அல்லது விலக்கப்பட்டாக வேண்டும் என்று செய்தி வந்தது. நான் உடனே, தலைவர் மூப்பனாருக்கு இங்கேயிருந்து டெல்லிக்கு Telephone செய்து, கவலைப்படாதீர்கள்; அந்த 3 இடங்களிலும், எங்களுடைய ஓட்டுகளைக் கொடுத்து நாங்கள் நிரப்புகிறோம்' என்று சொன்னேன். (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

திரு. சோ. பாலகிருஷ்ணன்: நான் ஒன்றைச் சொல்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சோதனை எல்லாம் ஒன்றும் வரவில்லை. யாரோ ஒருவர் மனு எழுதினார். இவர்கள் தமிழ் மாநில காங்கிரசா, காங்கிரசா என்று ஒரு Petition போட்டார். உடனடியாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஏன் இந்த மாதிரியெல்லாம் உங்களுக்கு ஒரு வார்த்தை வர வேண்டும்? நீங்கள் இராஜினாமா செய்து விடுங்கள்; நாங்கள் அந்த இடங்களை அப்படியே கொடுத்து விடுகிறோம்; அது எங்களுடைய இடம்தான்; கொடுத்து விடுகிறோம்' என்று சொன்னார்கள். அதைக்கூட நான் இப்போது முதலமைச்சர் அவர்களுக்கு வருத்தம் வந்தாலும் பரவாயில்லை என்பதற்காக ஓர் உண்மையை வெளியே சொல்லித்தான் ஆகவேண்டும். தலைவர் மூப்பனார் அவர்களை நாங்கள் எல்லாம் சேர்ந்து கட்டாயப்படுத்தி, 'நீங்கள் உங்கள் இடத்திலே நில்லுங்கள் என்று திரு. சிதம்பரம் உட்பட அத்தனைபேரும் கட்டாயப்படுத்தினோம். அப்போது சொன்னார்: 'நான் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தயவால் நாடாளுமன்ற உறுப்பினராக வர விரும்பவில்லை; (மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே, எனக்கு அந்த இடம் வேண்டாம் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லி, பிறகு, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓட்டால்தான் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகி வந்தார்கள் என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இது, மூப்பனார் அவர்களை, அவருடைய கட்சியினுடைய முன்னோடிகளை