520
நிதிநிலை அறிக்கை மீது
கின்றன. இந்த 41/2 ஆண்டுக் காலத்தில், ஏற்கெனவே 1969 முதல் 1976 வரை நடைபெற்றது. இப்போதும் அந்தக் காரியம் நடைபெற்றிருக்கிறது.
60-க்கு மேற்பட்ட பல்வேறு வகை தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியம், இது தவிர மேலும் 10 தனித் தனி நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
9
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம். மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் குடிசைகளில் குடும்பத்தினருக்கு கல்நார் வீடுகள். சுமார் 60 கோடி ரூபாய் செலவில் 9 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்கள். வணிகர்களுக்கு தொலைநோக்கு வரிக்கொள்கை, 1996-க்குப் பின் இதுவரையில் 2,60,654 தொகுப்பு வீடுகள், குறிப்பாக ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாகக் கட்டித்தரப் பட்டிருக் கின்றன. 'மெட்ராஸ்' சென்னை என பெயர் மாற்றப்பட்டது. தமிழ் இலக்கிய சங்கப் பலகை குறள்பீட விருது வழங்கப்பட்டது. 1996-க்குப் பின் 2459 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றிருக்கிறது. திருக்கோவில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு காரியங்கள் நடைபெறுகின்றன. அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை, சர்வ கட்சித் தலைவர்களையும் அழைத்து குமரி முனையிலே திறந்து வைக்கப்பட்டது.
பத்திரிகையாளர்களுக்குக் குடும்ப உதவித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசின் 5-வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் வரலாறு காணாத ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. ஆசிரியப் பெருமக்களுக்கு அவ்வாறே சலுகைகள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முன்னுரிமைப்படி செய்யப்பட்டிருக்கிறது. 10,12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கான உயர் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்விப் பிரிவுகளில் 15 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து ஒவ்வொரு வகைத் தொழில்