உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

நிதிநிலை அறிக்கை மீது

இதர பயிர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் என்பதும் 35 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க 1997-98 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கழக அரசு வழங்கிய முன்பணம் 76.41 கோடி ரூபாய். 1998-99இல் இத்தொகை ரூபாய் 210 கோடி ரூபாய். 1999-2000 ஆம் ஆண்டிற்கு 30 கோடி ரூபாய், இப்போது மீண்டும் வழங்கப் பட்டிருக்கிறது. டிசம்பர் 1996இல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக விளைபொருள் இழப்பிற்காக கழக அரசால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை 55.15 கோடி, இதன் மூலம் பயன்பெற்ற விவசாயிகள் 10 இலட்சத்து 5 5 ஆயிரத்து 166 பேர். மீண்டும் நவம்பர் 1997இல் ஏற்பட்ட வெள்ளச் சேதம் காரணமாக, விவசாயிகளுக்கு கழக அரசால் வழங்கப்பட்ட பயிர் இழப்பீட்டுத் தொகை, வெள்ள நிவாரணம் உட்பட ரூபாய் 59 கோடி. இதன் மூலம் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 50

ஆயிரத்து 297.

மூன்று குதிரைத் திறன் கொண்ட ஆயில் இன்ஜின்களுக்கு பதிலாக 5 குதிரைத் திறன் கொண்ட ஆயில் இன்ஜின்கள் வாங்க சிறு விவசாயிகளுக்கு, 25 விழுக்காடு அளவிற்கும், மிக, மிகச் சிறு விவசாயிகளுக்கு 30 விழுக்காடு அளவிற்கும், தாழ்த்தப்பட்ட மலைவாழ் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு அளவிற்கும் மானியத் தொகை கழக அரசால் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் 13 சதவிகித வட்டி, 12 சதவிகிதமாகவும் 50 ஆயிரம் ரூபாய்வரை கடன் தொகைக்கு விதிக்கப்படும் 16 சதவிகித வட்டி 15 சதவிகிதமாகவும் குறைப்பது என்று 24.10.2000 அன்று அமைச்சரவையின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது இஃதன்னியில் வட்டியைக் குறைப்பதற்காக வட்டியை அறவே இரத்து செய்ய முடியாத சூழ்நிலை NABARD காரணமாக நமக்கு ஏற்பட்டிருக்கிறது. வட்டியினுடைய தொகையைக் குறைப்பதற்காக நாம் ஊக்கத் தொகையாக தருவதன் மூலமாக 12 சதவிகித வட்டி என்பது நாம் தருகின்ற ஊக்கத் தொகையின் காரணமாக 7 சதவிகிதம் கொடுப்பதால், 5 சதவிகிதம் வட்டியாகக் குறைகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.