பக்கம்:நித்தியமல்லி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


கடரையும் அவர் ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்து தலையை அசைத்து வாங்க என்று வரவேற்ருர். மகளும் தாயும் ஒருத்தியை ஒருத்தி கலவரத்துடன் பார்த்துக் கொண்டார்கள். "இப்ப எப்படி உடம்புக்கு இருக்கு?' என்று கட்டுப் படுத்த முடியாத வேதனையைக் கட்டுப்படுத்தியவளாக வினச்சரம் தொடுத்தாள் மரகதத்தம்மை. "என்ளுேட செங்கமலவல்லியின் நெற்றிப் பொட் டைப் பறிச்சுக்கிட்டுப் போயிடுவேனேன்னு பயப் படுறேன் நான்' என்ருர் சீமான் ஆனந்தரங்கம். "அப்படி யெல்லாம் சொல்லாதீங்க. செங்கமல: வல்லி அக்காளோட நல்ல மனத்துக்கு பகவான் ஒன்றும் சோதனை செஞ்சிட மாட்டாருங்க. நீங்க அப்படி யெண்ணும் அதைரியப்படாதிங்க." - "ஆமாங்க ஐயா! நேர்மையான ஆசைகளும் நியாய மான கனவுகளும் நிறைவேற்றப் படுறதுக்கென்றுதான். என்மனசிலே தோன்றிக்கிட்டிருக்குதுங்க!" என்று மிக மென்மையான குரலில் பாங்குற வெளியிட்டான் தமிழ்ச் சுடர். வாழ்வியல் உண்மை ஒன்றைச் சந்தர்ப்பத்துக்குத், தோதாக எடுத்தியம்பி விட்டதில் அவளது கலையுள்ளம் மகிழ்வு காட்டிற்று. புதிய குரலைக் கேட்டமாதிரியாக, மனச்சிலிர்ப்புப் பெற்ருர் ஆனந்தரங்கம். ஆருத நிலையுடன் ஏறிட்டுத் திரும்பினர். தமிழ்ச்சுடரை ஆதரவுடனும் அக மகிழ் வுடனும் பார்த்தார். ஏதோ சொல்ல வாயெடுத்த: வருக்கு இருமல் வந்தது. எச்சில் கூடியது. எச்சில் உமிழ பாத்திரத்தை எட்டி எடுக்கப் பிரயத்தனம் செய். தார். அதற்குள் மரகதத்தம்மையே அந்த எச்சில் பாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/41&oldid=1277310" இலிருந்து மீள்விக்கப்பட்டது