பக்கம்:நித்தியமல்லி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : கொண்டு இருந்திருக்கவேண்டும்! இளமையின் எழில் .மண்டிய முகார விந்தத்தில் வேர்வைத் துளிகள் மிதந்து வழிந்தன. சுவர்க்கடிகாரம் எட்டு முறை அடித்து ஒய்ந்தது. ஜாதர் அண்ட் பெரியின் பொருளாதார நூலின் 'பாங்கிங் அத்தியாயத்தை முடித்து நிமிர்ந்தாள் தமிழ்ச் சுடர். பல்கலைக் கழகத் தேர்வுக்கு அவசியமான பகுதி யென்று பேராசிரியரால் கணித்துக் கூறப்பட்ட நுணுக் கங்களே வெகு நுட்பமாக மனத்தில் வாங்கிக் கொண்டு படித்து முடித்திருந்தாள். அவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளிவிட்டது. காலையில் நடைபெற்ற இலக்கியப் பரி சளிப்பு விழாவைத் தொடர்ந்து மாலையில் கிட்டிய ஆனந்தரங்கத்தின் சுகவீனச் செய்திவரைக்கும் அவள் .திரும்பவும் எண்ணிப்பார்க்க முனைந்தாள். உதயணனின் காதல் மனத்தைப் புரிந்துகொண்ட வாய்ப்பினையும் அவள் சிந்தையில் தேக்கிக் கொள்ள மறக்கவில்லை. அப்போது, மரகத்தம்மை அங்கு வந்தாள். அவள் கையில் ஆனந்தரங்கத்தின் பரிசுத் தந்தப் பெட்டி இருந்தது. அதைக் கவனித்தாள் மகள். ஆனந்தரங்கம் தனக்கு அடிநாளில் கொடுத்த காதல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட சம்பவம்பற்றித் தன் அன்னை தன் ளிைடம் சொன்னதையும் தமிழ்ச்சுடர் ஞாபகப்படுத்திக் கொண்டாள். அதேசமயத்தில், உதயணன்-ஆனந்த ரங்கத்தின் மைந்தன் உதயணன் அன்று முன் இரவின் தொடக்கத்தில் ஆஸ்பத்திரி மாடியில் தன்னிடம் கொடுத்த காதற் கனவின் வாக்கையும் அவள் நினைவு கொண்டாள். தன் தாய்க்குக் கிடைத்த உறுதிமொழி யுக் தனக்குக் கிடைத்திருக்கிற உறுதிமொழியும் அவ ஆளுள் சோதனைக் காய்களாக மனச் சதுரங்கத்தில் பதிந்தி 'ருந்த விசித்திரம் அவளுள் இனம் புரியாததொரு தவிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/52&oldid=786626" இலிருந்து மீள்விக்கப்பட்டது