பக்கம்:நித்தியமல்லி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

දා என்ன செய்ய முடியும்? எண்ணங்களின் நிழலில் ஒதுங். கிய அவளது கன்னி மனம். இப்போது பத்திரிகையில் ஈடுபட்டது. இந்திரா காந்தி பிரதம மந்திரியாக வெற்றிபெற்ற: நிகழ்ச்சியை எடுத்து சொன்னது நாளிதழ். பெண்மைச் சக்தியின் வெற்றியைப் போற்றி, அவ்வெற்றியில் மகிழ்ந்: தது தமிழ்ச் சுடரின் உள்ளம். சரித்திரத்தின் புதிய ஏடு மீண்டும் புறட்டப்பட்டிருப்பதாகவும் அவள் கணித் தாள். முட்டைத் தோசை தட்டில் விழுந்து மணம் கூட்டி யது. • , சாப்பிடம்ம !’ சஊம்!' தமிழ்ச்சுடர் சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவி ஞள். பிறகு தன் அன்னைக்குத் தன் கையாலேயே தோசை கட்டுப்போட்டாள் ஏதோதோ சிந்தனைகளின் ஊமைக் சலனத்தில் ஊடாடிக்கொண்டிருந்த தாயை வலுக்கட் டாயப்படுத்தி சாப்பிடச் செய்தாள் அவள். மரகத்தம்மையும் மகள் பேச்சை தட்டமுடியாமல்ல தட்டைக் காலி செய்தாள். அவளது தாய் இதயம் பாசத், தால் நிரம்பி வழிந்தது. . கைகளைக் கழுவிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். தமிழ்ச்சுடர். தன் அறைக்கு வந்தாள். மேஜை மீது இருந்த பவுடர் டப்பாவை எடுத்துக் கொண்டு மீண்டும் தலைக்கண்ணுடியின் முன் போய் நின்ருள். பவுட ரின் வாசனையும் பால்முகத்தின் கவர்ச்சியும் வழிந்தன. அந்த ரம்மியமான சூழலிலே அவள் எதையெல்லாமோ எண்ணி ஞள்: எண்ணத்தின் சூழலிலே ஏதோதோ ஆசைக்கனவு. கள் குமிழ்பறித்து விளையாடத் தொடங்கின. அவ்விளை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/9&oldid=786667" இலிருந்து மீள்விக்கப்பட்டது