பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நினைவுக் குமிழிகள்-1 கிடக்கின்றன என்று இவர் எண்ணினார். இவ்வாற்றல்களை வெளிப்படுத்தலே கல்வியின் நோக்கமாக இருத்தல் வேண்டும் என்றும் இவர் கருதினார். எனவே, இவர் புலன் கள் வாயிலாகத்தான் கல்வி புகட்டப்பெறல் வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரும் ஏட்டுப் படிப்பை ஆதரித் தாரிலர். சொற்களுக்கு முன் பொருள்கள் என்பது இவர் கொள்கையின் உயிர்நாடி. எனவே, உற்று நோக்கல் முறை (Observation method) என்ற ஒரு முறையையும் கண்டார். உற்றுநோக்கிக் கற்றவில்தான் மொழி விளக்கமடைகின்றது என்பது இவர் கொண்ட நம்பிக்கை. பெஸ்டலாஸ்ஸியின் முறையில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன. ஒன்று : புறஉலகிலிருந்து பட்டறிவுமூலம் பெறும் கருத்துகளே கல்வி என்பது; இப்பட்டறிவைப் புலன் கள் வாயிலாகவே அடையமுடியுமாதலால் ஆசிரியர் இவ்வறிவுப் பெருக்கத்தில் துணையாக இருக்க வேண்டும் என்பது இவரது விருப்பம். இரண்டு: முழுவளர்ச்சியடைய வேண்டிய மனிதன் குழந்தையிடமே மறைந்து காணப் படுகின்றான் என்ற ரூஸோவின் கொள்கையை இவரும் வலியுறுத்தினார். விவேகாநந்த அடிகளும் இதைத்தான் "கல்வி என்பது ஏற்கெனவே மனிதனிடம் மறைந்து கிடக்கும் அறிவின் மலர்ச்சியே' என்று கூறினார். பெஸ்டலாஸ்ஸியி னுடைய கொள்கையின் முதற்கூற்றை ஹெர்பார்ட் என்ற செருமானிய நாட்டுப் பேராசிரியர் அப்படியே தழுவினார்; இரண்டாம் கூறு அப்படியே ஃபிராபெல் என்ற செருமானிய நாட்டுக் கல்வி அறிஞரால் தழுவப்பெற்றது. பெஸ்டலாஸ்ஸி ஒர் உளவியற் கலைஞர் அல்லர்; ஆயினும் இவர் கல்வியை உளவியலின் அடிப்படையில் அமைக்க ஆர்வங் கொண்டார். இதை ஹெர்பார்ட் என்ற அறிஞர் நிறைவேற்றினார். 24. Education is the manifestation of the perfection already in man -Swami Vivekananda,