பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நினைவுக் குமிழிகள்-1 இக்காலக் கல்வி வல்லுநர்கள் வாய்க்குள் படித்தலை (Silent reading) மிகவும் வற்புறுத்துகின்றனர். இன்றைய உலகில் நூல்களும், கட்டுரைகளும், வெளியீடுகளும் செய்தித் தாள்களும் பிறவும் கடல்போல் பெருகிக் கிடக்கின்றன. "சல்விகரையில; கற்பவர் நாள் சில” என்பது கணந்தோறும் நினைவிற்கு வந்து கொண்டுள்ளது. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு என்பதை எல்லோரும் உணர்கின்றனர். இவையனைத்தையும், வாய்விட்டுப் படித்துணர்தல் என்பது இயலாத செயல். இதில் முயற்சி, காலச் செலவு இவை உண்டாவதுடன் சோர்வும் ஏற்படும்; கருத்துணர்தலும் (Comprehension) தடைப்படும். படிப்பதன் நோக்கம் கருத் துணர்தலேயாதலின், இதனை எளிதில் எய்துவிக்கும் வாய்க்குள் படிப்பே இதற்குப் பெருந்துணை புரிகின்றது; விரைவும் விரிவும் அமைந்த இவ்வகைப் படிப்பினால்தான் கருத்துணர்தல் எளிதில் கைவரப் பெறுகின்றது. மெய்யுணர்வுக் கல்வியிலும் இறைவனோடு இரண்டறக் கலக்கத் துணை செய்யும் மோன நிலையிலும் பேச்சு நிலையி லிருந்து பேச்சற்ற ஞான நிலைக்குப் போகும் படிகள் இருப் பதைக் காணலாம். கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆ றங்க முதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்ன வரை." 41. பரஞ்சோதி முனிவர் ; திருவிளையாடல் புராணம், கடவுள் வாழ்த் து. 14