பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நினைவுக் குமிழிகள்-1 பழிக்குத் துணை யவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணை வடி வேலுஞ்செங் கோடன மயூரமுமே" என்ற அருணகிரியாரின் திருப்பாடலும் எழுகின்றது. வாயும், ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம். என்று அந்த முருகப் பெருமானை வாழ்த்துகின்றது. கிராப்பு ஆசை : நீண்ட நாட்களாக கிராப்பு' வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொண்டிருந்த ஆசைக்கு அடிப் படையாக இருந்தது என் முடிதுறப்பு. ஆயினும் கிராப்பு வைத்துக் கொள்ளும் துணிவு எனக்கு இன்னும் வரவில்லை. முடிவளர்க்காமல் அரைகிராப்பு' வைத்துக் கொண்டேன். இது கிராப்பு மாதிரிதான்; முன்பக்கம் நெற்றிக்குமேல் முடி இல்லாமல் சிறைக்கப் பெற்றிருக்கும். என் நிலையைக் கண்ட என் தம்பி கணபதிக்கும் கிராப்பு ஆசை எழுந்தது. அதைச் சொல்லத் துணிவு இல்லை. தானும் பழிநி சென்று முடி யெடுத்து முருகப் பெருமானை வழிபடவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டான். என்னை அவன் தந்தையார் 42. கந்த, அலங். 70