பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii கூற்று நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவரிடம் பயின்ற மாணவன் என்ற முறையில் என்னால் துணிந்து கூறமுடியும். அவருடைய மாணவன் என்னும் ஒரு தகுதி கருதியே எனக்கு இந்நூலுக்கு அணிந்துரை எழுதும் பெரு வாய்ப் பினை ஆசிரியர் நல்கியுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. இற்றைநாள் வ ைர யி லா ன நிகழ்ச்சிகளையும் நினைவலைகளையும் ஆசிரியர் ஐந்து தொகுதிகளில் வெளியிட உள்ளார்கள். பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் எதுபற்றியும் எத்தனைத் தொகுதிகள் வேண்டுமானாலும் எழுதக்கூடிய அறிவும் ஆற்றலும் வாய்ந்தவர்கள். அவர்கள் எழுதும் அத்தனையும் முத்தனையதாகவே இருக்கும். இப் பெருந்தகை இன்னும் பல தொகுதிகளை நினைவுக் குமிழி களாக வெளியிடுகின்ற வகையில் நெடுநாள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டுமெனும் என் பெருவிருப் பினைத் தெரிவித்து வணங்கி அமைகின்றேன். 'குறளகம்’ சென்னை-600 108 அன்புடன், 15-12-1988 சு. செல்லப்பன்.