பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி. 27 27. நல்லாசிரியர்கள் இருவர் 15ரின் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை யாசிரியனாக ஒன்பதாண்டுகள் பணியாற்றியபோது முதற் படிவத்திலிருந்து பள்ளியிறுதித் தேர்வு வரை பொது அறிவியலும், நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதித் தேர்வு வரை ஆரம்ப கணிதமும், ஐந்து ஆறு படிவங்களில் இயற்கணிதமும் வடிவ கணிதமும், பள்ளியிறுதித் தேர்வு (ஆறாம் படிவம்) மாணாக்கர்கட்கு ஆங்கிலமும் கற்பித்தேன். இக்காலத்தில் எ-பிரிவு, சி.பிரிவு பாடங்கள் யாவும் தமிழிலே ய கற்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்து விட்டது. ஒன்பதாண்டுகள் துறையூரிலிருந்தபோது இடை நிலைப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பி.டி. தேர்வு பெற்றவர் கள், தமிழ் கற்பித்த தமிழாசிரியர்கள் இவர்கள் கற்பித்த முறையைக் கவனிக்கும் வாய்ப்பும் இருந்தது. ஒன்பதாண்டு கட்குப் பிறகு காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகப் பத்து ஆண்டுகள் பணியாற்றியபோது தமிழ் பயிற்று முறைகளைப்பற்றிச் சிந்திக்கவும், சிந்தித்தவற்றை பயிற்சிபெறும் பி.டி. வகுப்பு மாணாக்கர்கட்குச் சொல்லவும் வாய்ப்பு ஏற்பட்டது. இது தவிர, உள்ளுர் சுற்றுப்புற ஊர்களிலுள்ள உயர்நிலைப்பள்ளி கட்கு பி.டி. மாணாக்கர்களை இட்டுச் சென்று அப்பள்ளி களில் பாடங்கள் பயிற்று முறைகளைக் கவனிக்கச் செய்யவும், கவனித்தவற்றைப் பயிற்சி மாணாக்களிடம் கலந்தாயவும் வாய்ப்புகள் இருந்தன. இக்காலத்தில் பயிற்று முறைகள், கல்வி உளவியல்பற்றிய பல்வேறு நூல்களைப் பயிலவும், பயின்றவற்றைச் சிந்திக்கவும், சிந்தித்தவற்றை மாணாக்கர் கட்கு எடுத்துச் சொல்லவும், அவர்களுடன் கலந்தாயவும் வாய்ப்புகள் கிடைத்தன. பத்தாண்டுகள் இங்குப் பணியாற்றிய பிறகு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்