பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் 3.11 வைத்திருந்த கோப்புகளை - மறுபார்வை இடுவேன். காவிரிக் கரையிலேயே இந்த மூன்று பாடங்களிலும் நல்ல தெளிவு பெறுவேன். சில சமயம் கவிதைப் பாடங்களையும் இவ்விடத்திற்குக் கொணர்ந்து திரும்புவேன். இதனால் இடைநிலை வகுப்புத் தேர்வுகளை மிகத் திருப்தியான முறையில் எழுத முடிந்தது. குமிழி - 38 38. என் திருமண ஆண்டு நிகழ்ச்சிகள் இடைநிலைத் தேர்வுகள் எழுதுவதற்கு ஒரிரு திங்களுக்கு முன்னதாக நாமக்கல் வட்டம் பொட்டணம் என்ற சிற்றுாரிலிருந்து ஆ. பெ. இராமசாமி ரெட்டியார் இராமச்சந்திர ஆச்சாரி (விசுவகர்மா) என்ற இருவர் திருச்சியில் எப்படியோ விசாரித்துக் கொண்டு என் அறைக்கு வந்து என்னைச் சந்தித்தனர். இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள். முன்னவர் யார்? இவரைப் பற்றி இங்கு அறிமுகம் ஆக வேண்டியது இன்றியமையாதது. உறவு முறையாக இருந்தாலும் பல்லாண்டுகள் ஒருவருக்கொருவர் தொடர்பு அற்றிருந்தமையால் பெயர் முதலிய விவரங்கள் அறியக் கூடவில்லை. மேற்குறிப்பிட்ட இராமசாமி ரெட்டியார் என் பாட்டியாரின் மூத்த சகோதரி நாகம்மாளின் மகள் வயிற்றுப். பேரர்; இவருக்குச் செல்லபாப்பா என்ற சகோதரி உண்டு இவரைவிடப் பதின்மூன்று வயது இளையவள். இவர் திருமணமானவர். (இவரது திருமணம் பற்றிய விவரங்கள் வேறொரு குமிழியில் பொருத்தமான இடத்தில் வெளிவரும்). இராமசாமி ரெட்டியார் தன் சகோதரியை எனக்கு மணம் புரிவிக்க நினைத்துத் தன் நண்பர் ஆச்சாரியுடன் நான் தங்கி