பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பழைய நிகழ்ச்சி 345 திரும்பினோம். என் மைத்துனர் பொட்டணத்திற்கு வரும்படி என்னை அழைத்தார். ஒன்றிரண்டு நாட்களில் பழையபாளையம் தாத்தாவுடன் வருவதாகச் சொல்லி விட்டேன். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து என் பெரியப்பாவிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பழையபாளையம் தாத்தாவுடன் பொட்டணம் சென்றேன். இரண்டு மூன்று நாட்கள் தங்கினதாக நினைவு. நல்ல உபசாரம் இருந்தது. நடுப்பாட்டி நாகம்மாள் கூட என்னிடம் பாசத்துடன் பழகி னார்கள். தம் தங்கையின் பேரன் அல்லவா? நானும் என் அத்தைமகள் செல்லபாப்பாவும் எந்தவித உணர்வுமின்றி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். பேச்சு ஒன்றுமில்லை. அவளுக்குப் படிப்பு நின்றுவிட்டது என்பதை மட்டிலும் அறிந்து கொண்டேன். பொட்டணத்திலிருந்து விடைபெற்றுப் பழையபாளை யம் தாத்தாவுடன் பவித்திரத்திற்கு வந்தேன். முத்தியாலு ரெட்டியார் என்ற பெரியவர் எனக்கு மாமா முறை வேண்டும், அவர் மகன் கிருஷ்ணசாமி ரெட்டியார். அவருடைய முதல்தாரத்து மகன் தந்தையை விட்டுப் பிரிந்து தாத்தாவுடன் வசித்து வந்தான். முதல் தாரத்துப் பெண் பிள்ளையையும் தன் அண்ணனுடன் சேர்ந்து வசித்து வந்தாள். கிருஷ்ணசாமி ரெட்டியார் தம் இரண்டாம் மனைவியுடன் வசித்து வந்தார். இருவரின் உறவு கிரி - பாம்பு உறவு போன்றிருந்தது. இவர்கட்கு ஒரு பெண் பிள்ளை இருந்தது. அக்குழந்தை தன் பாட்டி வீட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். கிருஷ்ணசாமி ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது என் சட்டைப் பையிலிருந்த பணப்பையிலிருந்து ரூ. 7; எப்படியோ மறைந்தது. ஊர் திரும்புவதற்குப் பணம் வேண்டுமே. ஆதலால் காதோடு