தேர்வுக் கண்ணோட்டம் 389 பல்கலைக்கழகத்தேர்வில் கேட்கப்பெற்றுள்ள வினாக்களைப் பேராசிரியப் பெருமக்கள் சுட்டிக்காட்டுவார்கள், வேதியியல் பாடங்களில் கேட்கப் பெற்றுள்ள பொதுக்கட்டுரைகட்கு பல நூல்களின் துணைகொண்டு தனித்தாள்களில் (Foolscap) பதினைந்து பக்கங்கள் அளவில் கட்டுரைகளைத் தயாரித்து வைத்துக்கொள்வேன், பொது வேதியியல் (Genera| chemistry), அங்கக வேதியியல் (Organic chemistry) அநங்கக வேதியியல் (Inorganic Chemistry) இவற்றில் இரண்டாண்டுப் படிப்பு முடியும் நிலையில் ஒவ்வொன்றிலும் பத்துக் கட்டுரைகட்குக் குறையாமல் என்னிடம் இருந்தன. சில கட்டுரைகள் எம்.எஸ்சி. தரத்திலும் இருந்தன . இவற்றை அடிக்கடிப் பார்த்து அவற்றின் பொருள்களை மனத்தில் நிரந்தரமாக அமைத்துக் கொள்வேன். இரண்டாம் ஆண்டின் இறுதியில் எழுதிவைத்திருந்த வினாக்கள் அனைத்திற்குமே விடைகாணப் பெற்றிருக்கும் , என் அறைக்கருகிலுள்ள அறையில் சுப்பண்ணன் என்ற மாணாக்கர் இருந்தார், அவர் பி.ஏ. வகுப்பில் முற்றிலும் கணிதப்பாடமாகவே எடுத்துப்படித்தவர், கணிதத்தில் வரும் ஐயங்களை அவர் தீர்த்து வைப்பார். அவராலும் தீர்க்க முடியாத ஐயங்களை வகுப்பில் எழுப்புவேன்; பேராசிரியர் சீ நிவாசன் மிக அருமையாக விளக்கி எல்லோருமே பயனடையச் செய்வார், ஐயமாக இருக்கும் கணக்குகளை கரும்பலகையில் மிக அழகாகச் செய்து காட்டுவார். இயல்பாகவே கணிதத்தில் பேரார்வங் கொண்டிருந்த எனக்கும் கணிதப்பாடத்தில் நல்ல தெளிவு ஏற்பட்டது.