பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நினைவுக் குமிழிகள்-1 மனத்தில் அன்று ஒரு 'கானல்நீர் போல் தோன்றியதை இன்று நினைந்து அசை போடுகின்றேன். 'பண்ணைச் செல்வம்' என்பதுதான் என்ன? நினைவில் குமிழிகள் தோன்றும் அளவிற்குச் சொல்ல முயல்கின்றேன். சுமார் ஐம்பது ஏக்கருக்குக் குறையாத ஒரு சதுரமான நிலப் பகுதி இந்தப் பண்ணையார் வீட்டுப் பூர்வீகச் சொத்து . வண்டிப் பாதையில் வந்தால் மூன்று கிலோமீட்டர் தொலைவு. வண்டியில் வந்தால் இந்த வழியாகத்தான் வருவேன். இன்னொரு வழியில் வந்தால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு; பாதித்தொலைவு வண்டிவரும்; மீதித் தொலைவு நடராஜா சர்வீஸ்தான். மூன்றாவது வழி ஒன்றரைக் கிலோமீட்டர். இந்த வழி பலருடைய நஞ்சை வரப்பு வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவு வந்து கல்லும் மணலும் கலந்த கரட்டு நிலத்தில் ஒற்றையடிப் பாதையில் நடந்து மேற்படி நிலப்பகுதியை அடையலாம். நிலவளம் : இந்த நிலப்பகுதியில் நானிலச் சூழ்நிலை யையும் காணலாம். சுமார் இருபது ஏக்கர் நிலம் சாகுபடிக்கு ஒவ்வாத வறட்டு நிலம். சதுரமான நிலப்பகுதியின் நடுவில் தமிழ் எழுத்து ட வடிவில் அமைந்துள்ளது. மேடும் பள்ளமுமாக இருக்கும். மேடான பகுதியில் நெல்லடிக்கும் களம், உள்ளது. இந்தப்பகுதியில் வைக்கோல் போர் வரிசைகள் அமைந்திருக்கும். சற்றுப் பள்ளமான பகுதி பாலை நிலத்தோற்றமளிக்கும். கருவேல், வெளிவேல் மரங்கள் மிகுதி. இவற்றிலுள்ள பகுதிகளை வெட்டி ஆலைக் கூடத்தில் கருப்பஞ்சாற்றை வெல்லப் பாகாக்கி வெல்லக் கட்டியாக்குவதற்கு-அச்சு வெல்லமாக்குவதற்கு-விறகாகப் பயன்படுத்துவார்கள். இன்னொரு சற்று உ ய ர் ந் த பகுதி நிரந்தரமாக ஆலைக் கூடத்திற்கென்றே ஒதுக்கப் பெற்றிருக்கும். சொந்தமாக ஆலைப் பொறியும் அதற்குரிய தளவாடங்களும் இந்தப் பண்ணையார் வீட்டுக்குச்