பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகைவணிகர்களின் தொடர்பு 罗盘等) சிலர் அங்கே ஒதுங்கியிருந்து போக, அவ்வளவைக் கொண்டு, என் அடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத் தாய்' என்றும் இப்படைகளிலே சிலவற்றை அவர்கள் அறியாதிருக்கத் தானே ஏறிட்டு என்றபடி, மடி மாங்காய் இட்டு-மாங்காய் எடாமலே வாளா வழி போகின்றவன் மடியிலே, மாங்காயை மறைத்துக் கொண்டு சென்று இட்டு மாங்காய் களவு கண்டாப் என்று கூறுதல் போன்று என்றபடி, இது வலிய ஏறிடு” வதற்கு உவமை. 'பொன்வாணிகன்........ போரும்’ என்றது, பொன் வாணிகம் செய்வான் ஒருவன் எவரேனும் பரீட்சித்தற்குக் காட்டின பொன்னை உரைகல்லிலே உரைத்துப் பொன் சேராதபடி மெழுகாலே ஒத்தி எடுத்து நாளோட்டத்துடனே கால் பொன்னாயிற்று, கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டுமாறுபோலே, ஒரு பிறவி இருபிறவிகள் அளவன் றிக்கே மக்களுடைய ஜன்ம பரம்பரைகள் தோறும் விடாயைத் தீர்த்தாய், ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்பன போலே உண்டாக்கும் யாத்ருச்சிகம், ஊரைச் சொன்னாய், பேரைச் சொன்னாய்’ என்பனபோலே வரும் பிராசங்கிகம், அடியாரை நோக்கினாய்’ என்பது போல உண்டாகும் ஆதுசங்கிகம் என்கின்ற புண்ணிய விசேஷங்கள், சாஸ்திரங்களாலே விதிக்கப்பெற்றனவும் மக்களாலே அறியப் பெற்றனவு மன்றியிருக்க, அவற்றைப் புண்ணியம் என்று தானே கல்பித்துக் கல்பிதமானவற்றை ஒன்றைப் பல ஆக்கி நடத்திக் கொண்டு போதரும் என்றபடி. நகைக்கடைச் செட்டியாரின் தொடர்பும், நகைக் கடையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளும் இரகசிய கிரந்தங்களின் உண்மைப் பொருள்களை விளக்கிக்கொள்ள மிகவும் துணை புரிந்தன.