பக்கம்:நினைவுச்சரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 99

உத்து வெருளி பொம்மை மாதிரி வளைய வந்துகிட்டிருப்பா அல்லது, வசதியான இடத்திலே வாழ்க்கைப்பட்டிருந்தால் உடல் பெருத்து, மூஞ்சி மொந்தைமாதிரி தடியாகி, வயிற்றுப் பக்கமும் பின்பக்கமும் சதைகள் உருண்டு, விகாரமாப் பருத்து --இருக்காளுகளே எத்தனையோ பொம்பிளேகள், அப்படித் தான் இவளும்-சொள்ளமாடி கணக்கா நிற்பா. நம்ம சமூகத் திலே, பன்னிரண்டு பதின்மூன்ருவது வயசிலே குத்துவிளக் கின் முத்துச் சுடர்போலே பளிச்சிட்ட பெண்களின் பிற்கால வளர்ச்சி எல்லாம் இந்த ரீதியில்தான் இருக்கு. அட, அவளா இவ!?ன்னு அதிசயித்து அனுதாபப்படவேண்டிய அளவுக்கு உடலும் உருவமும் மாறிப்போகுது. பிரமுவும் அப்படித்தான் ஆகியிருப்பா. ரெண்டு மூணு குட்டிப் பிரமாயி களேயும் பிரமன்களேயும் உண்டாக்கி விட்டிருப்பா, அதிலே ஒண்னும் குறைச்சல் இருக்காது.ஐயோ பாவம் ! பதினெட் உாவது வயசிலேயே சிவபதவி அடைந்துவிட்டாள். ஏதோ மனக்குறையில்ை உருகி மெலிந்து கரைந்தே போனுள் :

இல்லாது போன ஒருத்திக்கு விரிவாக ஜாதகம் கணித்த அலுப்பில் பெரியபிள்ளே நெடுமூச்செறிந்தார். மனமாடு நினைவு வெளியில் இஷ்டம்போல் நகர்ந்து மேய்வதில் ஈடுபட்டிருந்த தால், அவருடைய கைகள் வேலே செய்யாமல் நின்றிருந்தன. குதிரைப்படம் பின்னப்பெற்ற அட்டை கையிலேயே இருந் தது. அதை ஒரு இடத்தில் வைத்தார்.

-- இப்படி அட்டையிலே நூல்களேக் கொண்டு படங்கள் பின்னி பொழுதுபோக்குவதை தமிழ்நாட்டுப் பெண்கள் மறந்து எத்தனையோ வருஷங்கள் ஆச்சு. பிறகு வந்த பெண் கள் சமைஞ்சு வீட்டுக்குள்ளே இருக்கையிலே பொழுது போறதுக்காக, துணியிலே பூவேலே-எம்பிராய்டரி-பண் .ணக் கத்துக்கிட்டாங்க. அப்போ எதிலே பார்த்தாலும் பச்சை நூல் கொடிகளும் சிவப்புப் பூக்களும், வளைவு நெளிவுகளும், கிளிகளும் வண்ணுத்திப் பூச்சிகளுமாப் பின்னிவச்சாங்க. அப் புறம் வந்ததய்யா பிளாஸ்டிக் வயர்களும் பாசி மணிகளும். பாசிமணிகளே கொண்டு ‘மணிப்பர்ஸ்’ தயாரிக்கிறது, சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/99&oldid=589343" இலிருந்து மீள்விக்கப்பட்டது