வல்லிக்கண்ணன் & 49 செய்வதற்காக தென்னாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த கோதச திருநெல்வேலிக்கும் வந்தார். அப்போது ஒருநாள் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தார். 'இந்திரா சிறு கதைப் போட்டியில் என் கதை முதல் பரிசு பெற்றிருந்த சமயம் அது. அவர் நன்கு பேசிப் பழகினார். நான் அலுவலகம் அடைந்தபோது ப. நீலகண்டன் இருந்தார். கோதச இல்லை. வேறு ஒருவர் காணப்பட்டார். ப.நீ.யிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொண்டேன். எனது பயணநோக்கத்தையும் தெரிவித்தேன். என் பேச்சில் ஆர்வம் காட்டிய மற்றொருவர் பரிவுடன் என்னைப் பற்றி அதிகம் விசாரித்தார். அவர் தான் எழுத்தாளர் ஆர். சண்முக சுந்தரம், கோயம்புத்துாரில் இருந்து வந்திருக்கிறார் என்று நீலகண்டன் அறிமுகம் செய்தார். ‘மணிக்கொடி”யில் சிறுகதைகள் எழுதி கவனிப்புப் பெற்றிருந்தவர் ஆர். சண்முகசுந்தரம், அவரை நாவல் எழுதும்படி கு.ப.ராஜகோபாலன் துண்டியதன் பேரில், அவர் "நாகம்மாள்' என்ற நாவலை எழுதியிருந்தார். அதைப் புத்தகமாக வெளியிடுவது பற்றிப் பேசி ஏற்பாடு செய்வதற்காக, 'சக்தி'காரியாலயம் வை. கோவிந்தனை சந்திக்க அவர் காரைக்குடி வந்திருந்தார். இந்திரா ஆபீசிலேயே தங்கியிருந்தார். இத்தகவல்களை சண்முகசுந்தரம் தெரிவித்தார். ‘இந்திராவில் என்னைச் சேர்த்துக் கொள்வதற்குத் தற்போதைய நிலைமை இடம் தராது. கோ. த. சண்முக சுந்தரமும், வீரவநல்லூர் சுந்தரம் என்பவரும் அங்கே பணிபுரிகிறார்கள். வேண்டுமானால் “சக்தி கோவிந்தனிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று பநீ கூறினார். நான் அழைத்துப்போய் வைகோவிடம் சொல்கிறேன் என்று சண்முக சுந்தரம் தாமாகவே உதவ முன்வந்தார். முதலில் குளிப்பு வேலையை முடித்துக் கொள்வோம். பக்கத்தில் ஒரு தோட்டமும் கிணறும் இருக்கிறது. குளிக்க, துணி தோய்க்க வசதியான இடம் என்று கூறி அவர் என்னையும் கூட்டிப்போனார். அவர் எளிமையான தோற்றம் கொண்டிருந்தார். புதியவனான என்னிடம் இயல்பாக அன்போடும் பரிவுடனும் பேசிப் பழகினார்.