அப்பொழுது ஈவா, என் அப்பா மிகவும் நல்லவர். டாம் மாமா, நீ எங்களோடு மிகவும் இன்பமாக வாழ லாம்!' என்றாள். நியூ ஆர்லியன்ஸை அடைந்ததும், அகஸ்டினை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த கோச்சு வண்டி யில் அவரும், மகளும், ஒபீலியாவும், டாமும் ஏறிக் கொண்டு சென்றனர். அகஸ்டின் துரையின் மாளிகை மிகப் பெரியதா யும் அழகாயும் இருந்தது. அதன் வாசலில், அடிமை களும் குழந்தைகளுமாகப் பெருங் கூட்டத்தினர் யசமானரை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந் தனர். வண்டி வந்ததும், எல்லோரும் ஆரவாரம் செய்தனர். அகஸ்டின் அவர்களுடைய நலத்தையெல் லாம் விசாரித்துவிட்டு உள்ளே சென்றார். ஆனந்தமாகத் தாண்டவ மாடிக்கொண்டே, ஒவ் வொருவரிடமும் சென்று கை குலுக்கினாள். டாம் அந்த வீட்டையும் மலர்ச்செடிகள் நிறைந்த தோட் டத்தையும் கண்டு வியப்படைந்தான். ஈவா, வீட்டுக்குள்ளே சென்ற ஈவா, தன் தாயின் கட்டி லருகே சென்று அவளைப் பன்முறை முத்தமிட்டாள். பிறகு அகஸ்டின் தன் மனைவியருகில் வந்து, தன் னுடன் ஒபீலியா வந்திருப்பதாயும், அவள் வீட்டு வேலை களைக் கவனித்துக்கொள்வாள் என்றும், டாம் என்ற புதிய அடிமை ஒருவன் வந்திருப்பதாயும் தெரி வித்தார். டாம் வசிப்பதற்கு நல்ல அறை ஒன்று அளிக்கப் பட்டது. அவனுக்கு உயர்ந்த உணவும், உடைகளும் கிடைத்தன. நா ம் நல்ல இடத்திற்கே வந்து சேர்ந் திருக்கிறோம் !' என்று அவன் எண்ணினான். அதே 52
1
52