பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இறந்ததற்குப் பிறகு டாமுக்கு விடுதலை அளித்து விட வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டாள். இந்த ஈவா ஒரு பெண்ணு, அல்லது தேவதையா? காந்தம் ஊசிகளை இழுப்பதுபோல, அவள் எல்லா அடிமைகளையும், மற்றவர்களையும் தன்வசம் இழுத்துக் கொண்டு விளங்கினுள். 12. இறுதி நாட்கள் நாளுக்கு நாள் ஈவா மெலிந்துகொண்டே யிருங் தாள். அவளுடைய அறையில் ஒரு பெரிய சாளரம் இருந்தது. அதனருகில், கட்டிலிலிருந்தபடியே, அவள் வெளியேயிருந்த ஏரியையும், இயற்கைக் காட்சியை யும் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவ ளுடைய கைகளில் வேதப்புத்தகம் எப்பொழுதும் இருந்துவந்தது. ஒரு நாள் காலை, அவள் மேரியிடம், 'அம்மா, என் தலை முடியில் கொஞ்சம் கத்தரித்து எடுக்கவேண்டும் ' என்று கூறிருள். எதற்காக ' என்று தாய் கேட்டாள். என்னுடைய கண்பர்கள் எல்லோருக்கும் நான் என் கையாலேயே அதைப் பிரித்துக் கொடுக்கவேண் டும் ' என்று சொன்னுள் மகள். சிறிது கேரத்திற்குப்பின் ஒபீலியா ஒரு கத்த ரியை எடுத்துக்கொண்டு வந்தாள். ஈவாவின் கூந்த லில் பின் தலையிலிருந்து சுருண்டு நீண்டிருந்த சில ரோமங்கAாக் கத்தரித்து, அவைகளை அவள் ஈவா

sーö ở ố

65