பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடம் கொடுத்தாள். பிறகு அடிமைகள் எல்லோரை யும் அங்கு வரும்படி அவள் ஏற்பாடு செய்தாள். ஆண் களும் பெண்களுமாக அடிமைகள் அனைவரும் அங்கு வந்து கின்றனர். ஈவா படுத்திருந்த நிலையையும், அவள் முகத்தையும் பார்த்த அவர்கள், தங்களிடம் அவள் கடைசியாக விடைபெற்றுக்கொள்ளப் போகி ருள் என்பதைத் தெரிந்துகொண்டனர். அறை முழு தும் அமைதி நிலவியது. ஈவா பேசத் தொடங்கினுள் : உங்கள் அனைவ ரிடமும் எனக்குப் பிரியம் அதிகம். கான் உங்களை விட்டுச் செல்லுமுன்னல், உங்களுக்கு ஒரு விஷயத் தைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அதை எப் பொழுதும் கினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்' இதைக் கேட்டதும் அடிமைகள் கண்ணிர் விட்டு அழுதனர். அவள் சிறிதுநேரம் மெளனமாயிருந்து விட்டு, மீண்டும் பேசலாளுள் : என்னிடம் உங்க ளுக்கு அன்பிருந்தால், நான் பேசும்பொழுது நீங்கள் அழுது தடை செய்யக்கூடாது. சுவர்க்கத்திலே என் ருவது ஒருநாள் நீங்கள் என்னைச் சந்திக்க விரும்பி ஞல், நீங்கள் நல்லவர்களாக மாறவேண்டும். நீங்கள் சோம்பலாகவும், கவனமில்லாமலும், சிந்தனையில்லா மலும் வாழக்கூடாது. நீங்கள் அன்பு நிறைந்த உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழவேண்டும். நீங்கள் ஆண்டவரைப் பிரார்த்தனை செய்ய வேண்டும். வேத நூலப் படிக்கவேண்டும் ஈவா பேச்சை இடையில் கிறுத்திக்கொண்டு, அவர்களை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். பிறகு மீண் டும் பேசிளுள் : அந்தோ! உங்களுக்குப் படிக்கத் தெரியாது

6 o'

66