பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


5
மனதை மடக்கினால் போதும்!


{இளமையே இரு
இளமையாக வாழ உடல் மட்டும் போதுமா? போதாது. மனமும் வேண்டும். மனம்தான் காட்டுக் குதிரையாக கனைத்துக் கொண்டு திரிகிறதே!

உடலில் உள்ள சுரப்பிகளை மாற்றிவிட்டால் இளமை வந்து விடுமா என்றால், அதுவும் நிச்யமாக இல்லை.

இளமை போய்விட்டது. முதுமை வந்து விட்டது என்று மனிதரை பாடாய் படுத்துவது இந்த ‘மனம்’ தான். இந்த மனம் வயதாகிவிட்டது என்று உணர்த்தத் தொடங்கியதுமே, உடல் உறுப்புக்களும் உற்சாகம் இழந்து போகின்றன. தளர்ந்து போகின்றன.

உதாரணமாக, ஒரு மனிதன் தைரியத்தை இழக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது தைரியம் இல்லாமல் பயப்படுகின்றான். உடனே அவன் மனதாலும் உணர்வாலும் தளர்ந்துபோகிறான். இந்தத் தளர்ச்சி இத்துடன் நின்று போய்விடுவதில்லை.