பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 8

நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்க்கையே அமைந்திருக்கிறது. நாளை இருப்போம் என்கிற நம்பிக்கையில்தான் நாம் உறங்க ஆரம்பிக்கிறோம். இன்னும் பல ஆண்டுகள் இருக்கப்போகின்றோம் என்ற அசைக்க முடியாக நம்பிக்கையில் தான் எப்படி எப்படியோ பணத்தை சேகரித்து வைக்கிறோம். பதுக்கியும் வைக்கிறோம். பராமரித்துக் கொண்டே பலப்பலத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் வருகிறோம். காரணம் என்ன? நெஞ்சில் நின்று ஊசலாடும் நம்பிக்கையால் தான்!

உயரமாக வளரலாம் என்கிறோம். உருவத்தில்மட்டுமல்ல, உள்ளத்திலும் தான். உருவம் வளர்கிறது என்றால், அதன் அடிப்படை முயற்சியால், எழுகின்ற திறனால் தேர்ச்சிமிக்க செயல்களால், திரண்டுவந்த அனுபவங்களால் உள்ளமும் உயரும். அதாவது நீர் உயர மேலுயரும் தாமரை போல

வரப்புயர்ந்தால் தண்ணீர் தேங்கும். வளம் கொழிக்கும் என்கின்ற அடிப்படையில் தான் ஒளவையும் வரப்புயர என்று வாழ்த்தினாள் என்று தமிழ் இலக்கியம் கூறுகிறது. வரப்புயர்வது போலவே, வளமான தேகமும், உயரத்தில் உயர வேண்டும் என்று தான் நாம் விரும்புகிறோம்.

இந்த எண்ணத்தின் எழுச்சியிலே தான். நீங்களும் உயரமாக வளரலாம் என்று கூறுகிறோம். அந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, நிமிர்ந்து நடைபழகிக் கொண்டு. நிச்சயம்! என்ற முடிவினையும் மேற்கொண்டு உயரமாக வளரத் தொடங்குவோம்.

நம்பிக்கை வந்து விட்டது என்றாலே அதனை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியதுதான் வெற்றியாளர்கள் கடமையாகும். ஒரு முடிவுக்கு வராமலே முன்னும் பின்னும்