பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

57


மாடுகளைப் போல, ஆற்றல் இல்லாதவனின் பக்கத்தில் பொய் நோய்கள் வாலாட்டும்.

சோம்பிக் கிடப்பவன்; தேம்பித் திரிபவன், உழைக்க மறுப்பவன், உழைப்பை வெறுப்பவன், உட்கார்ந்து கதை பேசிக் காலம் கழிப்பவன், பிறர் பிழைப்பில் வாழ்பவன், பேச்சை நம்பிப் பிழைப்பவன், எல்லாம் பொய் நோயின் குடியிருப்புக்களாக வாழ்பவர்கள் ஆவார்கள்.

சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பார்கள். ஓய்ந்திருக்காமல், ஓய்வில்லாமல் உழைப்பவர் இடமே அண்மையான அமைதியும், உயர்ந்த மகிழ்ச்சியும் அடையும் என்பார்கள். இதுதான் உண்மையான வழியாகும். தீமையற்ற திறமை காட்டும் வழியுமாகும்.

இத்தகைய வலிமையான திடமான மனது எங்கே கிடைக்கும்? பொய் நோய்களை விரட்டி விரட்டி அடிக்கின்ற திடமான இதயத்தை எப்படிப் பெறுவது?

இதற்கும் ஏதாவது குறுக்குவழி இருக்காதா என்று கிறுக்குத் தனமாகப் பேசி அலைந்து நலிபவர்கள் ஏராளம். ‘மருந்துகளைத் தேடுபவர்கள், ‘மயக்கங்களை நாடுபவர்கள்’ ‘மாதுகளுக்காக ஓடுபவர்கள்’ ‘மந்திரம் நாடி வாடுபவர்கள்’ ஏராளம் - ஏராளம்.

திடமான இதயமும் வலிமையான மனமும் எங்கே கிடைக்கும்? வலிமையான உடலில்தான் கிடைக்கும். இருக்கும் இடத்தை விட்டு விட்டு, இல்லாத இடங்களில் போய்த்தேடினால் எப்படி கிடைக்கும்?