பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது! - எங்கே கிடைக்கும் மகிழ்ச்சி? இமயத்தின் உச்சியிலா? ஏராளமான பணத்திலா? எழில் கொஞ் சும் ஆடை அணிகளிலா? அறுசுவை உண்டியின் அமோகமான விருந்திலா? இவை எல்லாம் தற்காலிசமாகத் தலை காட்டிவிட்டு நிஜல கொள்ளாத நெகிழ்ச்சியைத் தந்துவிட்டு, அலை அலையாக அவதிகளையும் கூடவே கூட்டி வந்து, குறுக்கு நெடுக்காகக் குழப்டங்களை உண்டு பண்ணி விட்டுப் போய் விடும். கடவுளுடன் படை திரட்டிப் பயங்கரமாகப் போரிட்டு மின்னல் படையால் தாக்குண்டு அடிபட்டு வீழ்ந்து, நரகத்திற். குள் தள்ளப்பட்ட சாத்தான் என்பவன், பலநாட்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து எழுகிறன், தன்னை நம்பிப் பின் தொடர்ந்த பலகோடி வீரர்கள், அடிபட்டு அலங்கோலமாக, ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கும் அதியாய சூழ்நிலையைக் கண்டு மனம் வெம்புகிருன், வேதனேயடைகிருன். பிறகு அவன் மனம் தேறி, தனக்குத்தானே பேசுகிருன்,