பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தால், என்னிடம் எப்பொழுதும் அமைதியும் சமாதானமும் நிறைந்து கிடக்கிறது என்கிருர் ரிச்சர்டு என்பவர். நிறைய விலையுயர்ந்த பொருள்களையும் அழகான சாமான்களையும் வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகிழ்ச்சி யாக் வாழ்கிறர் என்பது அர்த்த மல்ல. அவைகள் அவருக்கு மகிழ்ச்சியை வாங்கித் தந்துவிடும் என்பதும் உண்மையல்ல, இருக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டு அவை: களின் மூலம் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்ற ஆற்றலில் தான் மகிழ்ச்சி கிடைக்கிறது, மகிழ்ச்சி என்பது மனதிலே, மனதால் கிடைப்பது. பொருளால் அல்ல. மகிழ்ச்சியின் ரகசியமானது துறவு மனப்பான்மையில் தான் அடங்கிக் கிடக்கிறது என் கிருர் ஆன்ட்ரு என்பவர். துறவு என் ருல் உலக ஆசையை துறந்து போய் விடுவது அல்ல...எதிலும் அதிக வெறியுடன் மனதால் ஒட்டிக் கொள் ளாத நிலைதான் மனத்துறவு நிலை. எதைப் பார்த்தாலும் அது தனக்கு வேண்டும் என்று வெறியோடு தாவி விழுகின்ற ஆசை ; அது இல்லையே இருந்தால் நன்ருக இருக்குமே என்ற ஏக்கம் ! நமக்கு இருப்பதைவிட அடுத்தவர்க்கு நன்ருக இருக்கிறதே என்ற அடங்காத பொருமை உணர்ச்சி. இப்படி நம்மை நாமே கவலை வலைக்குள் ஆழ்த்திக்கொண்டு. கட்டிக் கொள்கிருேம். அப்புறம் எங்கே எப்படி வரும் மகிழ்ச்சி ! வாழ்க்கை என் ருல் தேவைகள் இருக்கும். தேவைகளே. கூடாது என்பதல்ல நம்முடைய வாதம். தேவைகள் வேண் டும். தேவைகள் நமக்கு தேவைதான். தேவைகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் உண்மை யான முயற்சி, உண்மையான உழைப்பு, உண்மையான