43 வழிகள் , உண்மையான மொழிகள் தான் நமது மனச் சான்றினை மகிழ்ச்சிப் படுத்துகிறது, அதைவிட முக்கியம், பெற்ற தேவைகளே, பார்த்து, ஏற்று அதை அனுபவித்துக் கொள்வது. Positive Thinking என் பார்கள். வந்ததற்காக மகிழ்கின்ற மனம் வேண்டும் என்பதுதான் அதன் பொருள் . வராததற்காக வருத்தப்பட்டுக் கொண்டி ருப்பது அல்ல; கிடைத்த ஒன்றை ஏற்றுக் கொண்டு மகிழ்வது பண்பட்ட மனத்தின் வழி. இன்னும் கிடைக்கவில்லையே என்று ஏங்கு வது பேய் மனத்தின் வழி. கிடைத்தற்காக மகிழும் மனதிற்குதான் திருப்தியான மனம் என்கிருேம். நிறைய செல்வம் வைத் திருப்பவர் மகிழ்ச்சியாக வாழ் கிருர், அவர்தான் பணக்காரர் என்பது தவறு. அதிக மகிழ்ச்சி யாக இருப்பவரே செல்வந்தர் ஆவார் என்கிறது சீனப் பழமொழி. ஆகவே, மனதைப் பிடித்துக் கொள்வோம். அது செல் கின்ற மார்க்சத்தை நெறிப் படுத்தி விடுவோம் பிறகு. நம் வசம் தானே மனம் வந்துவிடுகிறது : மனம் வசப்பட்டு விட்டால், மகிழ்ச்சியெல்லாம் நம் கையில் தானே ! எந்த மனிதனும் மகிழ்ச்சியாகவே இருக்க மாட்டான். அதாவது தான் மகிழ்ச்சியாக இல்லே என்று நினைக்கும் வரை, தெய்வம் உண்டென் ருல் உண்டு. இல்லையென்ருல் இல் ல என்று சொல்வார்களே. அதுபோலவே "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று நினைக்கும்வரை, மகிழும் வரை, அவன் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது.