பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21


இலவசமாகக் கிடைக்கிற நீரையும், நெருப்பையும் காற்றையும் நாம் ஏளனமாகக் கருதுவதுஇயல்புதான்.நம்மையறியாமல் நமக்குக் கிடைக்கும் இளமையையும் வலிமையையும் இப்படித்தான் கருதுகிருேம். தேவைப் படுகின்றபோது கிடைக்காத நீருக்கும் காற்றுக்கும் ஏங்குவது போல, வாழ்க்கைக்கு வேண்டும் போது. ஒடிப்போய் ஒரு திமிடத்தில் பெற முடியாதது வலிமையாகும்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். வலிமையும் இளமையும் பண்பாளர் இடத்திலே தான் தங்கும் என்பது தான் பொருந்தக்கூடிய வாசகமாகும்.

வலிமை நம்மிடம் வந்திருக்கிறது. அதை வரவேற்று வாழ்வு தருவோம். வளமான வாழ்வு பெறுவோம். இப் பிறவியில் நமக்கு வேறென்ன பேறு வேண்டும் ?