பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. வலிமையே வழிகாட்டுகிறது


வானத்திலே மீன்களையும், வனத்திலே மரங்களையும் எண்ணிவிடலாம் போலிருக்கிறது. வளர்ந்து வரும் ஜனத் தொகையை எண்ணவோ `இதுவரை பெருகியது போதும்’ என்று கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது போலிருக் கிறது.

வீதி வீதியாக விளம்பரங்கள். விதவிதமான சினிமாப் படங்கள்.

அதே தொழிலாக உள்ள அதிகாரப் படைகள் ஆர்ப்பாட்டமான செலவுகள் அனைத்துக்கும் 'டாட்டா' காட்டி விட்டு, ஜனப் பெருக்கம் நம் நாட்டில் 'ஜாம் ஜாம்' என்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது.

முப்பது முக்கோடி ஜனங்கள் என்று பாரதி பாடிய பாட்டை, இன்று வெளியே முனுமுனுக்கக்கூட முடியவில்லை. அதுதான் இப்போது 70 கோடியாகி விட்டதே ! இதை எழுதி முடிப்பதற்குள் எத்தனை குழந்தைகள் `ரிலீஸ்' ஆகி இருக்குமோ என்னவோ !

ஜனக்கட்டுப்பாடு வேண்டுமென்றால், மக்களுக்கு மனக்கட்டுப்பாடு தான் முக்கியமாக வேண்டும். மனக்கட்டுப் பாட்டில் மக்கள் வாழ வேண்டுமென்றால், உடல் கட்டுப்பாடுதான் முக்கியமாக வேண்டும்.

நல்ல உடலில் தான் நல்ல மனம் இருக்கும் என்பார்கள்.