பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37

 வலிமையான உடல் திற நிலை என்பது ஆண் பெண் அனைவருக்கும் அவசியமான ஒன்று. எல்லாதிலை வயதினருக் கும் இருக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளும் இளைஞர்களும் கூடுதலாகக் கொண்டிருக்க வேண்டிய ஒன்று.

ஏனென்றால், இத்தகைய திற நிலை தான், ஒரு செழுமை நிறைந்த முழுமையான வாழ்க்கையை அனுபவிக்கவும் ஆனந் திக்கவும் உதவுகிறது.

2. நமக்கு ஏன் உடல் திற நிலை வேண்டும்?

தேசங்கள் எல்லாம் அழிந்து போயின. ஆங்கே தோன்றி அழகு காட்டி அறிவை ஊட்டி. நளினம் காட்டி வாழ்ந்தநாகரிகங்கள் எல்லாம் நலிந்து நாசமாகிப் போயின. ஏன்? என்ன காரணம்?

நாடுகள் நாசமானதற்கும், அவற்றில் வாழ்ந்த மக்களின் வரலாறும் புகழும் அழிந்து போனதற்கும் காரணம்-அந்த மக்கள் உடல் திற நிலையில் தளர்ந்து போனது தான், திற மிழந்து தாழ்ந்தது தான்.

அதனால் என்ன ஆயிற்று?

கலைகள் அழிந்தன. காலங்காலமாய் தொடர்ந்து வந்த மக்களது அழகு களையிழந்தன. பிறர் போற்றி நின்ற புகழும் போய் தொலைந்தன. எல்லாவற்றுக்கும் அடித் தளமாக இருந்து வான்மேவ வளர்த்த செல்வங்கள் சீர்குலைந்தன.அன்னியர் ஆக்ரமிப்பிலே அனைத்தும் ஒழிந்தன.

காரணம்-மக்கள் உடல் திற நிலையை இழந்தது தான்.

இசனால் தான் வரலாறு எழுத வந்த ஆசிரியர்கள் எல்லோரும், பொற காலம் படைத்த நாடுகளின் விழுந்த பேரபாயத்தை, பிற நாடுகளும் பெறக் கூட சது என்ற ஆதங்கத்துடன் எழுதினர்