திறமாக வாழுங்கள். வலிமையுடன் வாழுங்கள். உடலாலும் மனதாலும் ஓங்கிய திறத்துடன் வாழுங்கள்.
இந்த உண்மையை உங்கள் உள்ளத்திலே நிறுத்திக் கொள்ளுங்கள். நொடிக்கு தொடி நினைத்துக் கொள் ளுங்கள். செயலுக்கு செயல் புகுத்திக் கொள்ளுங்கள்.
சீரான சமுதாயம் படைக்க, செழிப்பான வாழ்வு மையம் அமைக்க, மக்களே! உடலால் வலிமை பெறுங்கள். வாழ்வில் முழுமை பெறுங்கள் என்று எழுதி அழைக்கின்றார்கள் அழுதும் அறிவுரை பகர்கின்றார்கள்.
கேட்டவர்கள் களிப்புடன் வாழ்கின்றார்கள்,
கேளாதவர்களோ மகிழ்ச்சியைக் கோட்டைவிட்டு விட்டு, புலம்பும் வாயுடன் போய் முடிகின்றார்கள்.
3. நாம் வாழும் காலம்
புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். ஒரு பொத்தானை அழுத்திவிட்டால், ஆட்கள் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் நிமிடத்திலே செய்து முடிக்கக் கூடிய வசதிகள்.
வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள். தொழிற் சாலை கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எந்திரங்கள் வேலைப் பளுவை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டன.
அதனால் மனிதர்கள் வசதிக்கு ள் விழுந்து விட்டார்கள். ஆமாம்-அசதிக்குள் விழுந்து விட்டார்கள்.
நமது உடலுக்கு உழைப்பு தேவை என்ற உண்மையான தத்துவத்தை உதறித் தள்ளி விட்டார்சள் . எதற்கெடுத்தாலும் மெஷின்களை நம்புவது போல, தங்களுக்குத் தேவையான