பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதுகு வலி, மன உலைச்சல்கள், அதிக இரத்த அழுத்த நோய், இயற்கை நிலைக்கு மேலே எழுகின்ற நாடித்துடிப்பு - மூச்சடைப்பு, பலஹீனமான உடற்கூடு, அத்துடன் இருதய நோய்கள்.

இத்தனையும் முப்பது வயதிற்குள்ளே வந்து த39லை நீட்ட ஆரம்பித்தால், வரப்போகும் காலம் எப்படி அமையும் ?

இதையெல்லாம் யார் நினைக்கிறார்கள் ?

விருந்து வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு, மருந்து சாப்பிட்டால் போதும், வலியெல்லாம் தீர்ந்து போகும் என்ற விண்மயக்கம், பையிலே நிறைந்திருக்கும் பன மயக்கம்.

மக்களை இப்பொழுதெல்லாம் மருந்து தான் ஆட்கொண் டிருக்கிறது. பணம் இருந்தால் போதும், பூவுலகத்தையே விலைக்கு வாங்கி விடலாம் என்ற பூதாகாரமாக எழுந்தளி விருக்கும் பொய் நம்பிக்கைகள், இன்று மனித இனத்தை அணு அணுவாய் கொன்று கொண்டிருக்கின்றன.

நலமும் பலமும் உள்ள மனிதனாக வாழ வேண்டும் என்று நாம் அறிவுரை கூறுகிறோம். அடிக்கடி வற்புறுத்தி எழுதுகிறோம்.

உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு நல்லது, வாழ்க்கை மகிழ்ச்சிக்கு சிறந்தது என்று சொல்லுகிறோம். காரணத்துடன் தான். கேட்பவர்களோ கிண்டல் செய்கின்றார்கள்.

உடற்பயிற்சி செய்யாமல் நாங்கள் வாழவில்லையா? எங்களுக்கு என்ன வாழ்க்கை கெட்டுவிட்டது என்று ஏளனப்படுத்தி, தங்களுக்குள்ள இடர்களையும், ஏற்படும் இன்னல்களையும் மறைக்க முயல்கின்றார்களே யொழிய மனம் மாறி வருவதாக இல்லை .