பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

7. கொழுப்புச் சக்தி குறைந்து ஊக்கச் சக்தி மிகுதியாகிறது.

பலஹீனன் ஒரு சாதாரண வேலையைச் செய்யும் போது மேலே கூறிய ஏழு பயன்களும் மாறியே இவனிடம் நடக்கிறது. அத்துடன் மட்டுமல்ல.

! அந்த வேலையை ஆற்றும் போது, உள்ளிழுக்கின்றஉயிர்க்காற்றின் அளவு அதிகமாகி, மேல்மூச்சு கீழ்மூச்சு, பெருமூச்சு வாங்குதல் அதிகமாகிறது.

2 அதனால் நாடித்துடிப்பும் படபடப்பும் அதிகமாகித்,திக்கு முக்காடச் செய்கிறது.

8. இரத்த அழுத்தமே அதிகமாகிறது. வியர்வை நீராக ராமல், ஆறாகக் கொப்பளிக்க, விரைவில் களைப்பு வந்து விடுகிறது.

4. பலமுள்ளவனுக்கு நாடித்துடிப்பானது, பணி முடிந்த உடனேயே இயற்கை நிலைக்கு வந்துவிடும். ஆனால், பலஹீனனுக்கோ அதிக நேரம் பிடிக்கும்

5.அதுபோல, இரத்த அழுத்தமும் சாதாரண நிலைக்கு வர அதிக நேரம் பிடிக்கும்.

ஆனால் பலம் உள்ளவனுக்கு, மிகவும் கஷ்டமான வேலைப் பளுவிலுங் கூட, அதிகமான உயிர்க்காற்றை உள்ளுக்கிழுத்து ஈடு செய்து கொள்ளவும், அதிக நேரம் வேலை செய்யும் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளவும் எளிதாக முடிகிறது.

இவ்வாறு வெகு நேரம் வேலை செய்யவும், விரைவில்கிளைப்பு தீர்ந்து மீண்டும் செயல்படத் தயாராவதும், உடல் வலிமையுள்ளவர்களாலேயே முடியும். பலஹீனன் வாயோ