–4ቭ— பத்திரிகையாக மாற்றி " நியூ இந்தியா ' என்ற பெயரில் கடத்தினர். 1914 ஆம் ஆண்டு உலக முதற்போர் மூண்டது. அது போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஒத். துழைப்பைப்பெரிதும்எதிர்நோக்கிகின்றனர்.இதுதான் சமயம் என்று அறிந்த அம்மையார் போருக்குப் பிறகு இந்திய மக்கள் முன்னேற்றத்திற்கான முடிவுகள் பலவற்றைத் தருமாறு ஆங்கிலேயர்களின் பிரதிநிதி யாக அது போது இருந்த லாயிட் ஜார்ஜ் என்பவரைக் கேட்டார். அவர் அப்போது ஒன்றும் தக்க முறையில் பதில் அளிக்கவில்லை. அதல்ை அரசாங்கத்தாரின் தந்திரங்களையும் குறைகளேயும் சிறிதும் அஞ்சாது பத்திரிகைகளில் எழுதினர். அதன் காரணமாகத் சிறை செய்யவும் பட்டனர். இவ்வம்மையாரது தொண்டு தடைபட்டதைக் கண்ட பொது மக்கள் கிளர்ச்சி செய்யவே அரசாங்கத்தார், அம்மையாரை விடுதலை செய்தனர். அதல்ை இவ்வம்மையார் இந்தி யச் சுதந்தர வீரர் என்று அழைக்கப்பட்டனர். இதன் பயனக இந்திய தேசீயக் காங்கிரஸ் தலைமைப் பதவி யையும் பெற்ருர். மதச் சார்பில் இந்த அம்மை யார் செய்த தொண்டும் குறிப்பிடத் தக்கதாகும். அம்மையார் அரசியலில் கலந்து தொண்டாற்றிய பின் சென்னை அடையாற்றுச் சங்கத்தில் தங்கி இருந்த,