பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் திருப்புகழ் 75

பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது துாது சென்ற Para vai manaimeedhill andrru oru pozhudhu thūdhu sendra

பரமன் அருளால் வளர்ந்த குமரே சார் Para man a rula al vallarndha Kumarē saa ! பகை அசுரர் சேனே கொன்று அமரர் சிறை மீள வென்று pagai asurar sēnai kondrru amarar sirrai meela vendru பழனிமலை மீதில் நின்ற பெருமாளே! Pazhanimalai meedhil nindrra perumaallē !

கருவில் விழுந்து, உருவெடுத்துப் பிறந்து, ஒவ்வொரு வயதாக வளர்ந்தேன்;

கலைகள் பலவற்றையும் கற்று அறிந்தேன்; கரிய கூந்தலையுடைய பெண்களின் (காதல் மயக்கத்தால் அவர்களுடைய கால் சுவடுகளே என் மார்பில் புதைத்துக் கொண் டேன்;

கவலைகள் அதிகம் ஆயின; அதனுல் வருந்தினேன்; மிகவும் வாடினேன்.

அாகர, சிவாய என்று நாள் தோறும் நினேக்கவில் லே; ஆறு வகையான சமயங்கள் கூறும் கோட்பாடுகளை ஒன்றும் அறிந்து கொள்ளவில் இல.

உணவு இடுபவர்கள் வீட்டின் வாசலில் நாள்தோறும் நிற்பேன்

இங்ங்னம் நான் வெட்கம் இல்லாமல் அழியலாமோ? படம் உடைய பாம்பின் மேல் படுத்து இருப்பவர்பெரிய பெருமாள் ஆகிய திருவரங்கர்உலகத்தை அளந்தவர் ஆகிய திருமாலின் மருமகனே! தாய் தந்தை ஆகிய இருவர் மரபுகளிலும் விளக்கைப் போன்றவனே!

உயர்ந்தவனே! கொடிகட்டிய கவியரசர்களில் சிங்கம் போன்றவனே! சீர்காழியில் அன்று (சம்பந்தராக) வந்தவனே! சுந்தரருக்காகப் பரவையாரின் வீட்டுக்கு ஒருநாள் துTதாகச் சென்ருர் சிவபெருமான் -

அச்சிவபெருமானின் அருளால் வளர்ந்த குமரேசனே ! பகைவர்கள் ஆகிய அரக்கர் சேனையைக் கொன்று தேவர் களைச் சிறையினின்று மீட்டவனே !

பழநி மலையின் மேல் இருக்கும் இறைவனே!