பக்கம்:நீலா மாலா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126 வர்கள் எல்லாருமே கூட்டமாக வந்து அவர்களை வியப்போடு பார்க்கத் தொடங்கினர். கூட்டம் வர வர அகிகமானதால், போலீஸார் வங்து ஒழுங்கு. படுதத வேண்டிய கிலேகூட ஏற்பட்டுவிட்டது ! வண்டி மீண்டும் புறப்படும்போது, பிளாட் பாரத்தில் கின்ற முன்பின் தெரியாதவர்களெல்லாம் கூடத் தங்கள் கைகளை ஆட்டி நீலா,மாலாவை வழி அனுப்பி வைத்தார்கள். ரயில் புறப்பட்டுச் சிறிது நேரத்தில் ஒரு டிக்கெட் பரிசோதகர் ஐந்தாறு பொட்டலங்களுடன் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். 'பல்லைத் தேய்த்துவிட்டு இந்தப் பலகாரங்களைச் சாப் பிடுங்கள். பாவம், பட்டினியோடு இருப்பிர்கள். உங்களைப் பார்க்க வந்தவர்கள், உங்களைச் சாப் பிடக்கூட விட்டிருக்க மாட்டார்கள்' என்ருர் அவர். அவரது அன்பைக் கண்டு அவர்களது மனம் கெகிழ்ந்தது. அவர்கள் பல்லைத் தேய்த்துப் பலகாரத்தைச் சாப்பிட்டதும், டிக்கெட் பரிசோதகரும், அப்பெட்டி யிலிருந்த மற்றவர்களும் அவர்களுடன் பேசிக் கொண்டே வந்தார்கள். ரவி தாம்பரம் வந்துதான் எழுந்தான். அவன் எழுந்ததும், ரவி, இதோ பார், இது யார்?" என்று பத்திரிகையிலிருந்த நீலாவின் படத்தைக் காட்டிக் கேட்டாள் நளினி. அவன் நீலாவைப் பார்ததுச் சிரித்தான். இது யார்?' என்று மாலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/128&oldid=1021691" இலிருந்து மீள்விக்கப்பட்டது