பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80



கதை : ஐந்து



பாடும் கடலும்

ஆடும் மாம்பழமும்
பேசும் பறவையும்

சிவந்திபுர மன்னருக்கு தேவப்பிரியன் என்னும் ஒரு குமாரனைப் பெற்றுத் தந்துவிட்டு மகாராணி மாண்டுபோனாள். அவளை இழந்த துக்கம் ஆறிய சிறிது காலத்திற்குப் பிறகு சிவந்திபுர மன்னர் மற்றொரு ராணியை மணம் புரிந்து கொண்டார். பானுமதி என்னும் அந்தப் புதிய ராணி வயதில் இளையவள்; இறுமாப்பு மிகுந்தவள்; அதிகாரம்