பக்கம்:நூறாசிரியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

101


உறவின் நெருங்கி உறவுபோல் நெருங்கியிருந்து.

கரவின் மொழிவாங்கி - கரவு நிறைந்த உள்ளத்தோடு பிறர் கூறுகின்ற மொழிகளை ஒன்றுவிடாது உள்வாங்கி, இயல்பாக மொழிவதை மட்டுமன்றி, மொழியாலாகாத பிறவற்றையும் தம் கரவு சான்ற மொழிகளால் மேலிட்டு வாங்கி, நாம் கொடுப்பது அன்றித் தாமே வருவித்துக் கொள்ளலால் வாங்கி எனலாயிற்று.

கதுமென-விரைவு என, விரைவாக, வாங்கியவுடனே புறமாறுதலால் கதும் எனும் மிகுவிரைவுக் குறிப்பு குறிக்கப்பட்டது.

புறமாறும்புறத்தே விலைபோக்கும். மாறுதல் - விலைபோக்குதல், முல்லை மாறி-கற்பை விலைபோக்குநள். முல்லை - கற்பு.

பொய்தோய் நெஞ்சம்-பொய்ம்மை தேங்கி உறைந்த நெஞ்சம் தோய்தல் உறைதல்(எ.டு) தயிர் தோய்ந்தது. பொய்ம்மைதோயாது நீர் போல் நிற்பின் ஒரு காலத்தே அதனை வடிவித்தலும் கூடும். ஆகையால் அவ்வாறு வடிவித்தலும் கூடாமைப் பொருட்டுத் தோய்ந்து கிடக்கும் நெஞ்சம் எனலாயிற்று.

புரையோர் கீழ்மையோர், நிறையற்றவர், உள்ளீடற்றவர். புரை. உட்டுளை, பொள் துளை பொள்-புள்-புளைபுழை-புரை உள் தங்கும் நெஞ்சினரல்லாமையின் ஒரு புறம் வாங்கிய மொழிகளை மறுபுறத்தே ஒழுகவிடுந் தன்மையோர்.

தவறுை பேதைமை குற்றமற்ற பேதைமை.

தவல் - குற்றம் தவநிறைவைக் குறிக்கும் ஒர் உரிச்சொல். மிகுதிப் பொருள்தரும் ஒரு முன்னிலை (எ-டு) தவப் பெரிது-மிகப் பெரிது.

தவ+அல்-தவல்-மிகுதியல்லாதது; குறைவானது குற்றமுடையது.

குல்-குர்-குறு-குறுமை; குறு-குற்று-குற்றம், குறு-குறை

குல்-குன்-குறு-குன்னு-குன்று குன்றல்,

தகவோர் தவறு தக்கவர் சிற்சிலகால் செய்யும் தவறு.

குற்றம் செய்தல் வேண்டும் என்ற கருத்தின்மையால் ஒரோவொருகால் செய்யப்பெறும் தவறு. அவை அவ்வப்பொழுது சிற்சில கேடுகளைப் பயப்பினும் அறியாமையால் செய்யப் பெற்றனவாகையால் அவை பொறுத்தற்குரியனவும் மறத்தற் குரியனவுமாம் என்பது.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுனர்க
நோதக்க நட்டார் செயின் - என்பது குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/127&oldid=1220730" இலிருந்து மீள்விக்கப்பட்டது