124
நூறாசிரியம்
மனப்பினும் - தழுவிப் படர்ந்தாலும்.
அரத்துவாய் வெவ்விலை வேம்பு- அரத்தின் பற்களைப் போன்ற ஒரங்களை உடைய வேம்பின் இலை.
வெள்பு-வெப்பு-வேம்பு, வெப்பம் நிறைந்த தன்மையுடைய மரம்.
வரைவின் மகளிர் தம் பற்கள் கூரியவாயினும் அரத்தின் பற்களைப் போல் கொடுமையன. அவை தழுவத்தழுவத் தழுவப் பெற்ற பொருள் நிலைகுலைவது போல், அவரால் தழுவப்பெற்றாரும் நிலைகுலைந்து போவர் என்பது பொருள்.
சினையனைந் தவிழினும் - வேம்பின் பூஞ்சினைகளை யணைந்து அவற்றோடு தானும் ஒன்றாக முல்லை மலர்ந்தாலும்.
பூஞ்சினைகளொடு பொருந்தி நின்றது, தலைவன் புறப்பெண்டிரொடு நெருங்கிப் படரும் நொச்சியைக் குறித்தது. அவ்வாறு நெருங்கிப் படரினும் தன் தன்மையில் மாறுபடாத் தகையவன் அவன் என்றாள் என்க.
மெளவல் - முல்லை - காட்டு மல்லிகை.
வெவ்வேறாதே - வெவ்வேறு ஆகாது - ஆதே-இடைக்குறை.
எவ் இடம் பெயர்வோன் ஆயினும் - எத்தன்மை வாய்ந்த இடம் நோக்கிப் பெயருந் தன்மையோன் எனினும்.
அவ்விடம் - அவ்விடத்து.
செவ்வி - ஒழுங்கு பண்பு - நேர்மை,
செம்- பகுதி நேர்மையைக் குறிக்குமொரு சொற்பகுதி.
செப்டம்-செம்மை- செவ்வி.
மாறுவர் அல்லர்-மாறுபடுவோரல்லர் 'மாறா'என்று குறியாது, மாறுவர் அல்லர் எனக் குறித்தது, அவ்வாறு மாறுபடுவோர் பலராகலின், அத்திறத்தோர் இவரல்லர் என்று உறுதிப்படுத்த வேண்டி என்க.
ஒவ்வி-புறத்தே ஒப்பி.
உளம் புகுந்து - உளத்தே புகுந்து உளத்தில் நிறைந்து,
எனை மணந்தோர் - என்னைத் தழுவினோர். மணந்தவர்.
ஆடவர் பலர் போலன்றி என் தலைவன் தன் திறத்தில் என்றும் எவ்விடத்தும் மாறுபடாத் தன்மையோன் என்று கூறி அவன் மேல் தோழி கொண்ட ஐயத்தைப் போக்கித் தன் தலைவனின் ஒழுக்கத்தை உறுதிப் படுத்தினாள் என்க.
இது முல்லைத் திணையும் அவனறிவாற்ற லறிந்தேற்றியது என்னுந் துறையுமாம்.