பாவலரேறு பெருஞ்சித்திரனார்
401
இன்னா ஒழுக்கத்து நீ இவண் படுதல் - தீயொழுக்கமுடையவனாய் நீ இங்கே இருப்பது. இன்னா ஒழுக்கமாவது சான்றோர் கடிந்த கட்குடியும் சூதாட்டமும் வரைவின் மகளிர் தொடர்பும் பிறவுமாம்.
என் அமைந்து உரைக்கினும் இழுக்கே - என்ன அமைதியைப் பொருந்தக் கூறினும் குற்றமாவதே.
அமைவு - ஏற்புறு கரணியம்; சமாதானம் என்பது வடசொல்.
எலுவ - இளந் தோழனே!
தோழன் எனப் பொருள்படும் எலுவன் எனுஞ்சொல் விளியேற்று நின்றது.
சான்றோர் கூற்றாகக் கொள்ளக் கிடத்தலின் இளந்தோழனே எனக் கொள்ளப்பட்டது.
ஆயும்காலை - ஆராய்ந்து பார்க்குமிடத்து. ஆய்தல் நுணுகிப் பார்த்தல்
சால்பிற்கு நீயும் உரியை - தும் இல்லறம் பெருமையான் நிறைவுற விளங்குதற்கு நீயும் உரிமையுடையாய்.
சால்பு - பெருமையின் நிறைவு.
அவள் தனியன்றே - அவள் நின்னின் வேறுபட்டவள் அல்லளே!
இப்பாடல் பெருந்திணை என்னும் புறத்தினையும் குறுங்கவி என்னும் துறையுமாம்.