இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
412
நூறாசிரியம்
- உள்உயிர் நெகிழ்ந்து - உயிரின் உள்ளே நெகிழ்ச்சியுற்று.
- நெகிழ்தல்- அன்பால் உருகுதல்,
- சில்நெய்பெய்து - சிறிதே நெய்யூற்றப்பட்டு.
- சின்மை அளவாற் சிறுமை குறித்து நின்றது.
- நுண்திரி மாண்ட - மெல்லிய திரியால் சிறந்த
- சுடருக்கு இடமானமையின் மாண்ட என்றார்.
- வல் வளித்து உண்விளக்கம் ஆகி-கடிது காற்று வீசும் வெளியிடத்தினுள் வைக்கப்பெற்ற விளக்கம் என்னுமாறு ஆகி.
- வன்மை கடுமை, வளித்துஉள்-காற்று வீசுவதான வெளியினுள்.
- உள்நடுங்கி ஒடுங்கும் - உள்ளம் நடுங்கி அமைந்திருக்கின்ற
- உள்-உள்ளம் ஒடுங்குதல் - அமைந்திருத்தல்,
- ஒருவன் ஈங்கு உளன் - ஒருவன் ஈண்டு உளன்.
- இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.