பக்கம்:நூறாசிரியம்.pdf/456

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

நூறாசிரியம்


ஆரவ லின்றி அயன்மிசை யிலைபோல்
அழுகை யின்றி அருமகிழ் விலைபோல்
விழுகை யின்றி எழுகையும் இலைபோல்
எள்ளும் இழிவும் இகந்த ஒழுக்கமும்

கள்ளுங் களியுங் கயமையு நிறைந்தே
15

அடுவதும் அழிவதும் ஆகிப் புதுவதாய்க்
கெடுவ தின்றே உலகம் கீழ்மையுங்
கொலையுங் களவுங் கூடிய புனைவும்
புலையும் பொய்யும் உலகத் தியல்பே’

24

யாக்கைக் குளிரிகு நாக்கனல் வெக்கை
ஆக்கியோ ரொருவ ராயினுந் தெருமரப்
பெறுவோ ரிளலரின் வெறுவா மாக
உறுவோர்க் கீக வுற்ற ஞான்றே!