இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
43
ஈங்கிவ் விடையிலெம்.புனையே - என்றது ஈங்குக் காட்டிய இத்துணைத் துயர் சான்ற நிலைகளுக்கிடையில் எம் துணுக்குறும் உயிர், எத்திசை போகி இத்தரை கடப்பது என்றறியாது காட்டாற்று வழிச்செல்லும் புனை போன்றதாம் என்பது.
இப்பாட்டு, நாட்டுநிலை குலைந்த நிலையில் மக்கள் நிலை தாழ்தலும், மக்கள் நிலை தாழ்ந்த நிலையில் நாடு திருவிழ்ந்து வாடுதலும், அதன் வழி, சான்றோர் தமக்குற்ற துயரையும் பொருட்டாக நினையாது, நெஞ்சங் கவலுதலும், உயிர் அழுங்குதலும் கூறவந்த பாடலாகும்.
இது பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.