பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு குழந்தை - ஐம்பதாண் டகவை யடைந்தனை யாகினும் அம்புலி முகத்தின் அழகிலும் கொவ்வைப் பழந்துளங் கிதழிற் படர்தரு நகையிலும் குழந்தையின் பொலிவு குலவுதல் கண்டேன்; தீதறி யுலகம் தெரியா திருந்தனை சூதும் வாதும் யாதும் அறிந்திலை யாது நீ செய்யினும் பேதுறும் மகவே: கடிந்துனை ஒருகாற் கழறினும் விழிநீர் படிந்து சிற்றிளம் பாவை யாகுவை; என்னுயிர்க் காதலி எவ்வகை நோக்கினும் பொன்னுருக் குழந்தை போலுனைக் காண்குவென் எனயான் மொழிந்தேன்; என்னுயிர்த் தெய்வம் புன்னகை பூத்துப் போதும் புகழ்ச்சி என்னுளத் துறையும் இறைவ நீயும் குழந்தை யுள்ளம் கொண்டனை யறிவேன்' எனலும் நகைத்தேன் இரண்டு போதும் இனிமேல் வேண்டா' என்றனள் கரும்பு மொழியில் குறும்பு கலந்தே! ر1983-4-9) நெ-6 கவியரசர் முடியரசன் 0 81