பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன்: விருந்தா மருந்தா உண்ட உணவு அரும்பா மலரா கொண்ட உறவு இருந்தால் எழுந்தால் மங்கை நினைவு இதுதான் அவளால் வந்த விளைவு! தலைவி: குழலோ முகிலோ என்று புனைந்தார் குயிலோ குரலோ என்று மொழிந்தார் அழகோ கலையோ என்ன நயந்தார் அறமோ முறையோ இன்று பிரிந்தார்! தலைவன்: உயிராய் உடலாய் ஒன்றி யிருந்தோம் உலகே அதுதான் என்று மகிழ்ந்தோம் மயிலோ அனமோ என்னும் நடையாள் மயலே துயரே தந்து நடந்தாள்! 80 - கெஞ்சிற் பூத்தவை