பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடையை வெளுப்பார் என்மேல் == அடிப்பினும் உதவி நிற்பேன் ஆடுமென் தலையைப் பற்றி ஆட்டினும் அரைப்பேன் மாவை பாடுகள் படுத்தும் அந்தப் பாவையர் என்னை அம்மி மேடையில் உருட்டும் போழ்தும் மிளகுகாய் அரைத்தே நிற்பேன்! இவ்வணம் உதவல் கண்டும் இளகிடா மனத்துக் கென்னை எவ்வனம் உவகை சொல்ல இசைந்ததோ உலகம்? பாடம் செவ்வணம் பயிலாப் பள்ளிச் சிறுவர்தங் கையிற் சிக்கின் அவ்வவர் விருப்பம் போல அழிவுகள் பலவுஞ் செய்வேன்! சிற்றுளி கொண்டே என்னைச் சிதறிட உடைப்பார் மாந்தர் மற்றவர் உண்ணும் போது மறைந்திருந் துடைப்பேன் பல்லை: 4.2 0 கெஞ்சிற் பூத்தவை: